வீட்டுக் கழிவறையில் சடலமாக இருந்த புதிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

222

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம், சாமராஜ நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுதா ராணி. இவர்கள் இருவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வந்தனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவர்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளது. அப்போது அவர்கள் வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டு இருந்தது.

மேலும் எவ்வளவு நேரம் அழைத்தும் வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் இவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது கழிவறைக்குள் இருவரும் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் இறந்து ஒருநாட்களுக்கு மேல் இருக்கும். இதையடுத்து இருவரது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் திருமணத்திற்கு முன்பு லீவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கழிவறையில் விஷவாயு தாக்கி உயிரிழந்து இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறையில் தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.