பாலியல் கொடுமையால் மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது!!

1447

கோவையில்..

கோவையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் பள்ளியில் படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் மாணவி குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையில் இறங்கினர். அதன்படி, மாணவி படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தியின் மனைவி அர்ச்சனாவை தற்போது மகளிர் காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.

மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் மாணவி பாதிக்கப்பட்டது தெரிந்தும் காவல்துறைக்கு புகார் தெரிவிக்காததால் இருந்த குற்றச்சாட்டில் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அதாவது, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போனை போலீசார் தடயவில் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கபட்ட மாணவி, இது குறித்து ஆசிரியர் மிதுனின் மனைவியான ஆசிரியர் அர்ச்சனாவிடம் கூறியது தெரியவந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போலீசார் கைது கோவை சிறையில் அடைத்தனர்.