பரீட்சை..
சாதாரண தர பரீட்சை முடிவடைந்த அன்று, பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சிலர் செயற்பட்ட விதம் சமூகத்தில் பேசுபொருளாக மாறியிருந்தது.
இதக்போது பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மின் விசிறிகள், மேசைகளை சேதப்படுத்தி நாற்காலிகளை தொங்கவிட்ட நிலையில் மாணவர்கள் சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்று மீது குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று (15.06.2023) அவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அதிபராலும் பொலிஸாரினாலும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவர்களின் செலவில் சேதமாக்கப்பட்ட வகுப்பறை மற்றும் தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.