கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து.. நடந்த விபரீதம்!!

1036

தியத்தலாவையில்..

தியத்தலாவை பகுதியில், பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்தொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொரலந்தையில் இருந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்துடன், மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.