யாழில் பேருந்து – வான் மோதி கோர விபத்து : 9 பேருக்கு நேர்ந்த கதி!!

1590

யாழில்..

யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (26.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இருந்து வந்த தனியார் பேருந்து, கிளிநொச்சியில் இருந்து வந்த வான் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த அனைவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.