புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை!!

645

இலங்கை..

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்னே மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகியோர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதன்படி, பெண்களுக்கான 1,500 மீற்றர் போட்டியில் அபேரத்ன 04 நிமிடம் 14.39 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் லெகாம்கே 60.93 மீற்றர் தூரத்தை எறிந்து இலங்கைக்கான புதிய சாதனையை படைத்ததுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அபேரத்ன தலைமையிலான 13 பேர் கொண்ட இலங்கை தடகள அணி, ஜூலை 09 ஆம் திகதி பாங்காக் சென்றுள்ளது.இந்த அணி ஜூலை 12 முதல் 16 வரை பாங்காக்கில் உள்ள சுபச்சலசை தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது.