சீனாவில் மீண்டும் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல்..!

399

சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஷின்ஜியாங்கில் மோட்டார் சைக்கிள்களில் பட்டாக் கத்திகளுடன் வந்த நூற்றுக்கும் அதிகமானோர் அங்குள்ள ஒரு பொலிஸ் நிலையத்தைத் தாக்கியதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலகுவில் சென்றடைய முடியாத ஹோடன் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பிராந்தியத்தில் தொடரும் வன்செயல்களில் இறுதியாக நடந்திருப்பதாகும்.

இந்த மாகாணத்தின் மற்றுமொரு பகுதியில் இந்த வார முற்பகுதியில் இன்னுமொரு பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் பிராந்தியத்தில் சீனா காட்டமாக நடப்பதாக அந்தப் பகுதியில் உள்ள உய்குர் சிறுமான்மையினர் மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

(BBC)