வவுனியா மத்திய தபால் நிலையத்தில் இரத்தான நிகழ்வு : பலர் பங்கேற்பு!!

988

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள மத்திய தபால் நிலையத்தில் 149வது உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்தான நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இரத்ததான முகாமில் தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.