காதல் தோல்வியால் 17 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

1447

மத்துகமவில்..

மத்துகம பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.காதல் உறவினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டின் பின்புறமுள்ள ரம்புட்டான் மரத்தில் தூக்கிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தூக்கிட்ட மாணவனின் குடும்பத்தினர் மாணவனையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் யசஸ் ஆதித்ய விதான என்ற 17 வயது மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.