வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவன் சுரேந்திரா அக்சரன் 181 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் நிலை!!

2816

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.


அவர்களில், மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட மாவட்ட வெட்டுப்புள்ளியான 145 இற்கு மேல் 74 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில் சுரேந்திரா அக்சரன் என்ற மாணவனும் யூஜின் ஆனந்தராஜ் எறின் பியரினா என்ற மாணவியும் 181 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார். இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.