வெளி நாட்டில் உயிரிழந்த தமிழர் : சொந்த நாட்டிற்கு உடலை கொண்டுவர தவிக்கும் குடும்பம்!!

524

தமிழகத்தில்..

தமிழக மாவட்டம், திருச்சியை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்த நிலையில், சொந்த நாட்டிற்கு உடலை கொண்டு வரவேண்டும் என்று குடும்பமே தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக மாவட்டம், திருச்சியைச் சேர்ந்த தம்பதி ராஜ சேகர் (43) மற்றும் ரோஸ்லின் மேரி. இதில் ராஜசேகர் திருச்சியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவுதி அரேபியாவில் தோட்ட வேலை செய்வதற்காக சென்றுள்ளார்.

அங்கு, ஒரு வருட ஒப்பந்தம் முடிந்த பிறகு, அதனை இரண்டு ஆண்டுகளாக புதிப்பித்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவ.18 ஆம் திகதி வேலைக்கு சென்று அறைக்கு திரும்பும் போது சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் மோதி ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் நண்பர் ஒருவரின் மூலமாக, அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால், ராஜசேகரின் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது.

இதனையடுத்து, ராஜசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அவரது மனைவி, குழந்தைகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால், இரண்டு நாள்கள் ஆகியும் ராஜசேகரின் நிலை குறித்த முழுமையான தகவல் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதனால், தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.