வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

698

வவுனியா சின்னப் புதுக்குளம், வெளிக்குளம் சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (25.01) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை செயலாளர் தயாபரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பேருரையினை இந்து கலாச்சார உத்தியோகத்தர் சிவகஜனால் நிகழ்த்தியிருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர், தமிழ் விருட்சம் அமைப்பினர், நகரசபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.