வவுனியா குருமன்காடு பகுதியில் கிணற்றிலிருந்து 29 வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

5657

வவுனியா குருமன்காடு கோவில் வீதி பகுதியில் கிணற்றிலிருந்து 29வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக காணப்படுள்ளார்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக காணப்பட்டவராவர். இம் மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையாக என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் பொலிஸார் நாடியுள்ளனர்.