யாழில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்!!

1048

யாழில் தனியார் பேருந்தில் பயணித்த, முல்லைத்தீவு இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை(23) யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் இடம் பெற்றுள்ளது.

பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பொழுது குறித்த இளைஞன் தவறி விழுந்ததாக போலீசார் கூறினர். உயிரிழந்த இளைஞன் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அழகன் நிதர்சன் என பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை யாழ்ப்பாண போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.