கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : மகள் அனுப்பியுள்ள உருக்கமான இரங்கல் செய்தி!!

555

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17.03.2024) இடம்பெற்றுள்ளன.

மார்ச் 6 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த 19 வயதான மாணவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் உட்பட அவர்களுடன் தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையரும் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த காமினி அமரகோனின் மனைவி மற்றும் மகள் இறுதிச் சடங்குக்காக இலங்கையில் இருந்து இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளனர்.

உயிரிழந்த காமினி அமரகோனின் 11 வயது மகள் ஆஷேரி அமரகோன் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், “என் அப்பாவை பற்றி நான் சொல்ல வேண்டும், அவர் எங்கள் அனைவருக்கும் சிறந்த தந்தையாகவும், என் அம்மாவுக்கு நல்ல கணவராகவும் இருந்தார்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நாங்கள் உங்களை சந்திக்க வருகின்றோம். கடவுள் ஆசீர்வதிப்பார்.”

காமினி அமரகோனின் மனைவி திஷானி பெர்னாண்டோ, “மன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதற்கு. ஆனால் மகள்கள் ஆஷேரி மற்றும் கெய்லியுடன் நான் எப்போதும் உன்னுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருப்பேன்.

நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கின்றோம். நீங்கள் இல்லாமல் எங்களுக்கு பாழடைந்த வாழ்க்கையே அமையும்.” என்றும் தெரிவித்துள்ளார்.