வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

2999

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (01.04.2024) மாலை கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டிலிலுள்ள கிணற்றிக்கு பக்கத்திலுள்ள வாழை மரத்தின் வாழைக்குலையினை வெட்ட முற்பட்ட சமயத்தில் தவறி கிணற்றிலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.