வவுனியா வைத்தியசாலை சுகாதார தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்!!

426

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (02.04.2024) மதியம் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை அடைந்து நிறைவுபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்..

சுகாதாரத்துறையின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட கொடுப்பனவு அனைவருக்கும் வழங்கப்படவேண்டும், அத்துடன் முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை, இதேவேளை நிலுவைக் கொடுப்பனவுகள், சீருடைக் கொடுப்பனவுகள் போன்றன நீண்டகாலமாக வழங்கப்படவில்லை,

இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அதனால் எந்த பயனும் கிடைக்காத நிலமையே நீடிக்கின்றது.

எனவே எமது கோரிக்கையினை அரசாங்கம் செவிமடுக்காது விடில் நாளையதினத்திலிருந்து தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தாயாராகிவருவதாக தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சொந்த நாட்டில் வேலை செய்யும் எமக்கா இந்த நிலமை, அரசாங்கமே வீடு செல்,வாக்குறுதி அளித்தபடி பொருளாதார கோரிக்கைகளை நிறைவுசெய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த பேரணியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.