வவுனியா நகரசபை மைதானத்தில் சித்திரைக் கலைவிழா கோலாகலமாக ஆரம்பம்!!

1856

வவுனியாமாவட்ட கலாசார அதிகாரசபை நடாத்தும் சித்திரைக் கலைவிழா நேற்று (04.04.2024) கோலாகலமாக ஆரம்பமாகியது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சரத் சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதில் மாவட்ட கலாமன்றங்களின் கண்காட்சிக் கூடங்கள், மாணவர்களின் சித்திரக் கண்காட்சி, சமுர்த்தி பயனாளிகளின் விற்பனை மற்றும் கண்காட்சி நிலையங்கள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் காட்சிப்படுத்தல்கள், இராணுவம் மற்றும் பொலீஸ் பிரிவுகளின் சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை குறித்த நிகழ்வு இன்றயதினமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.