வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு!!

461

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (04.04) விடுவிக்கப்பட்டது.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த நெடுங்கேணி பாெலிசார் அங்கு இருந்த 8 பேரை கைது செய்ததுடன் ஆலயத்தில் இருந்த பாெருட்களையும் எடுத்துச் சென்றிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தாெடர்ந்து நீதவான் நீதிமன்றின் அனுமதியோடு பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.