வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் விபத்து : சாரதி உட்பட இருவரின் நிலமை கவலைக்கிடம்!!

2109

வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவை அண்மித்த இடமான ஏ9 வீதி ரம்பாவ பகுதியில் நேற்று (12.04) மதியம் அதிசொகுசு பேரூந்து எதிரே வந்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன்,

இவர்களில் காரின் சாரதியின் நிலமை கவலைக்கிடமான முறையில் காணப்படுவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.