வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

357

வவுனியா பொலிசாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் அதிகளவிலான மக்கள் வந்து செல்லும் புதிய பேரூந்து நிலையப் பகுதியில் குறித்த நடவடிக்கை இன்று (24.04.2024) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சமுதாய பொலிஸ் குழுவால் குறித்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் சமுதாய பொலிஸ் குழுவினரும் இதில் கலந்து கொண்டு டெங்கு கட்டுபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

இதில் புதிய பேரூந்து நிலையம், கண்டி வீதியோரம் என்பவற்றில வீசப்பட்டிருந்த போத்தல்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் என்பன அகற்றப்பட்டதுடன், நீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டது.