கண்டம் தாண்டிய காதல்.. போலந்து பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்!!

152

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார்.

அங்கேயே வேலை கிடைக்க தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் போலந்தைச் சேர்ந்த எவலினா மேத்ரா (30) உடன் ரமேஷனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரின் குடும்பத்திற்கும் இதனை கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே பாரம்பரிய முறைப்படி ரமேஷன், எவலினாவின் திருமணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.