வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பிரிவில் இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
அந்தவகையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் நான்கு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் 1,2,3,5 ஆம் நிலைகளை பெற்றுள்ளனர். அத்துடன் 8 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்தியடைந்துள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் 4 மாணவர்கள் 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் ஒரு மாணவி மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளார். அத்துடன் 4 மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்திபெற்றுள்ளனர்.
கணிதப் பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஆ சித்திகளை பெற்றுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 5ம் நிலையினை பெற்றுள்ளார். அத்துடன் 6 மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்தியடைந்துள்ளனர்.
கலைப்பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 23 ஆம் நிலையினை அடைந்துள்ளார். தொழில்நுட்ப பாடத்தில் மாவட்ட மட்டத்தில் 9 ம் நிலையினை ஒரு மாணவி பெற்றுள்ளார்.