இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மேற்கிந்தியத் தீவுகளிள் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் பங்கேற்று வருகின்றன.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.
இப்போட்டியின்போது, டோனிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விக்கட் காப்பாளர் பணியை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்.
இந்த தசைப்பிடிப்பு சரியாகாததால் எஞ்சிய போட்டிகளில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அம்பதி ராயுடு அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். கோலி அணித்தலைவர் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்துவார்.
கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இலங்கை நேரப்படி இப்போட்டி இரவு எட்டு மணியளவில் ஆரம்பமாகும்.
இரு அணிகளும் தமது முதல் போட்டியில் மண்ணைக் கவ்வியமையால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் கட்டாய வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன.