அண்ணன், தம்பி இரட்டையர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

432

காளையார்கோவில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகரில் வசித்து வருபவர் ஆண்டிச்சாமி. இவரது மகன்கள் 23 வயதில் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் இரட்டையர்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இருவருமே பட்டதாரிகள். அதே போல் இருவரும் மஞ்சு விரட்டு, மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச்செய்யும் வகையில் மாடுகளை வளர்த்து, உரிய பயிற்சியும் அளித்து வந்தனர்.

இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான அரண்மனை சிறுவயல் கிராமத்தில் வசித்து வருபவர் வல்லவன் மகன் ராஜேஷ். சாத்தரசன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 19 வயது சிவாஜி மகன் நவீன்.



கிளுவச்சி கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயது முத்துமணி மகன் அஜய். இவர்களுடன் சிவகங்கை மாவட்டத்திற்குள் நடைபெறும் மஞ்சு விரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வென்று பரிசுகளை பெற்று வந்தனர்.

அப்போது அவர்கள் தங்கள் மாடுகளை முதலில் அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜூன் 12ம் தேதி பனங்குடி கோவில் திருவிழாவில் மஞ்சு விரட்டில் தங்களது மாடுகளை சகோதரர்கள் அவிழ்த்து விட்டனர்.

அந்த மாடுகளை சிவகங்கை அருகே புதுப்பட்டி யில் வசித்து வருபவர் சக்தி என்பவர் மகன் மதன். அவனது நண்பர்கள் மாட்டை பிடித்ததாகவும் இதில் இரு தரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

முன்விரோதம் காரணமாக நேற்று இரவு 10 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேரும் 3 இருசக்கர வாகனங்களில் சென்று ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

3 பேரையும் தாக்க முற்படும்போது மூவரும் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.