குழந்தை பிறந்த 10 நாளில், கணவர் கறுப்பாக இருப்பதால் பிரிந்து சென்ற மனைவி!!

1100

கணவர் கறுப்பாக இருக்கிறார் என்று நிறத்தை காரணம் காரணம் காட்டி மனைவி பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால் மோகியா(24). இவருக்கு கடந்த வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இவருக்கு திருமணமானதில் இருந்து கருப்பாக இருப்பதால் நிறத்தை காரணம் காட்டி இவருடைய மனைவி கிண்டல் செய்து வந்துள்ளார். பின்னர், நாளடைவில் இதனை வைத்து அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.



இதனிடையே, இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தையை தனது கணவர் வீட்டில் வைத்துவிட்டு தனது தாய் வீட்டிற்கு மனைவி சென்றுவிட்டார்.

இதையடுத்து, மனைவியை அழைக்க விஷால் மோகியா சென்றபோது, நிறத்தை காரணம் காட்டி அவருடன் வருவதற்கு மனைவி மறுத்துள்ளார்.

பின்னர், தனது தாயுடன் சென்று மகளிர் பொலிஸ் நிலையத்தில் விஷால் மோகியா புகார் அளித்தார். அப்போது, தான் கருப்பாக இருப்பதால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் வரும் சனிக்கிழமை கவுன்சிலிங் கொடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.