அவதூறு பரப்பிய உறவினர்கள்.. விரக்தியில் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

467

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பொட்டங்கல் பகுதியில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவிப்பேட்டை மண்டலம், ஃபகிராபாத்-மிதாபூர் இடையே இளம் ஜோடி ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அவர்கள் அப்பகுதியில் உள்ள ஹெக்டோலி கிராமத்தைச் சேர்ந்த அனில் மற்றும் சைலஜா என்பது தெரியவந்தது. இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்ஃபி வீடியோ எடுத்து உறவினர்கள் எங்கள் மீது தவறான தகவல்களை பரப்பி பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி கோத்தகிரி எஸ்ஐக்கு சைலஜா வீடியோ அனுப்பியுள்ளார்.

தம்பதி தற்கொலை செய்து கொள்ள கோதாவரி ஆற்றுக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் பாசறை பாலத்திற்கு சென்றனர்.



ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால், போலீசார் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, பகீராபாத் மற்றும் மிதாபூர் கிராமத்திற்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் அவர்களது உடல்களை கண்டெடுத்தனர்.

மேலும், தங்கள் சாவுக்கு உறவினர் பினா என்பவர் தான் முக்கிய காரணம் என கூறிய நிலையி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அனில்-சைலஜா தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.