ஊருக்குள் வந்த 12 அடி நீள ராஜநாகம் : அச்சத்தில் மக்கள்!!

2020

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று பார்த்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அங்கு பெய்துவரும் கடுமழை காரணமாக ராஜநாகம் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி மரத்தின் கிளைகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனையடுத்து அதுதொடர்பில் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.



தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.