யாழ். மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலைகள்!!

929

யாழ். மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலைகள் அமைக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தினை ஆண்ட மூன்று மன்னர்களின் சிலைகளை மணிக்கூட்டுக் கோபுரத்தின் மூன்று மூலைகளிலும் வைப்பதற்கு யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

யாழ் நகரப் பகுதியில் சுற்றுலாப்பணிகளின் வருகை அதிகரித்துள்ளது அதனடிப்படையில் யாழ்.சமூகத்துடன் கலந்துரையாடிய போது எமது வரலாற்று மன்னர்களின் சிலைகளை வைப்பதன் மூலம் வரலைாற்று உண்மைகளை யாவருக்கும் காட்ட முடியும் என்ற நோக்கத்துடன் யாழ். மாநகர சபை யாழ்ப்பாணத்தினை ஆண்ட மூன்று மன்னர்களின் சிலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கையினை எடுத்துள்ளார்.

இதன்படி யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தினை சுற்றியுள்ள மூன்று வளைவுகள் தற்போது யாழ்.மாநகர சபையினால் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் மன்னர்களின் சிலைகள் அமைப்பதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றில். மன்னர்களின் சிலைகள் அமைக்கப்படவுள்ளது.

இந்தச் சிலைகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தின் போது திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

13 12 11