பிரிட்டனில் இலங்கை மாணவர் கொலையில் இரண்டாவது கொலையாளியும் இனங்காணப்பட்டார்!!

488

Thavasikka

இலங்கை பல்கலைக்கழக மாணவரான தவசிக்க பீரிஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இருவரில் ஒருவர் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

25 வயதான தவசிக்க பீரிஸ் ஷெபிபீல்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இதன்போது அவர் பகுதிநேர தொழிலாக பீஸா விநியோகிப்பவராக செயற்பட்டு வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் 27 ம் திகதி அவர் பீஸா விநியோகம் செய்து விட்டு திரும்பும் போது அவரின் கையடக்க தொலைபேசியை களவாடும் நோக்கில் இருவர் அவரைத் தாக்கி கொலை செய்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் 25வயதான சாம்ராஸ் கான் என்பவர் இன்று ஷேப்பீல்ட் க்ரௌன் நீதிமன்றத்தில் குற்றவாளியாக ஜூரிகளால் இனங்காணப்பட்டார். இதனையடுத்து அவருக்கான தண்டனை தீர்ப்பு இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.

18வயதான காசிம் அஹ்மட் ஏற்கனவே இந்தக் கொலை சம்பவத்தின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது இருவருமே கொள்ளை மற்றும் கொலையை ஏற்றுக்கொண்டனர்.

நீதிமன்றத்தில் இரண்டு குற்றவாளிகளும் இனங்காணப்பட்ட நிலையில் தவசிக்க பீரிஸின் குடும்பத்தினர் பிரித்தானிய பொலிஸாருக்கும் ஊடகங்களுக்கும் கொலையாளிகளை கண்டுபிடித்தமைக்காக நன்றி கூறியுள்ளனர்.

எனினும் தமது மகனின் இழப்பை ஈடுசெய்ய முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.