வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் : வெளிவந்த காரணம்!!

3209

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக தோட்ட மண்வெட்டியால் தாக்கி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஈச்சங்குளம் அம்மிச்சைத்யன் பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றுமுன்தினம் (09.11.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தை விட்டு தப்பியோடிய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கொலையுடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.