பாடசாலைக்குள் புகுந்து இளம் ஆசிரியை குத்திக்கொலை!!

601

தமிழக மாவட்டம் தஞ்சாவூரில் அரசு பாடசாலை ஆசிரியை, கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பாடசாலையில் ஆசிரியையாக ரமணி (26) என்ற இளம்பெண் 4 மாதங்களுக்கு முன் பணிக்கு சேர்ந்துள்ளார்.

பாடசாலை தொடங்கிய வேளையில் ஆசிரியை ரமணி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த மதன் (28) என்ற நபர் ரமணியை வெளியே அழைத்து பேசியுள்ளார்.

அப்போது திடீரென அவர் ஆசிரியையை கத்தியால் குத்தியுள்ளார். தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், படுகாயமடைந்த ஆசிரியை ரமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என தெரிய வந்துள்ளது.

மேலும், ரமணியின் குடும்பத்தார் அவரை திருமணம் செய்துகொடுக்க மறுத்ததும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.