தோகையில்லா
மயில்
ஒன்றை கண்டேன்
கூண்டில் சிக்காத
பறவை
என்று எண்ணிக்கொண்டேன் !
சிறகில்லா
அன்னப்பறவை
ஒன்றை கண்டேன்
சிற்பியால் செதுக்கப்பட்ட
சிற்பம்
என்று எண்ணிக்கொண்டேன் !
வண்ணமில்லா
ஓவியம்
ஒன்றை கண்டேன்
பெண்ணாய் வந்த
வான்நிலவோ
என்று எண்ணிக்கொண்டேன் !
நுரையில்லா
அலை
ஒன்றை கண்டேன்
நுரையீரலின் துடிப்பே
அவள் தான்
என்று எண்ணிக்கொண்டேன் !!!
-சௌமியாசுரேஷ்-