இலங்கையில் 26 வயதான இளைஞன் எடுத்த விபரீத முடிவு : பரபரப்பு சம்பவம்!!

1818

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (08-01-2025) மதியம் கொட்டகலை – கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் சுமார் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து, பதுளை நோக்கி செல்லும் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்ததாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. உயிரிழந்த இளைஞன் பற்றிய விபரம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.