கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடலூரில் திருமணமான 25 நாட்களுக்கு கணவருக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் கலையரசன் என்பவருக்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி திருமணம் நடந்தது.
பெரியோர் சம்மதத்துடன் நடந்த இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் மணப்பெண் ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.
திருமணம் முடிந்து முதல் இரவின்போது தான் இன்னொருவரைக் காதலிப்பதாக ஷாலினி கலையரசனிடம் கூறியுள்ளார். இதனால் ஷாலினியை அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்துவிடலாம் என்று இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி ஷாலினி கலையரசனுக்கு கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்றும் இதனால் கலையரசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
தங்கள் மகனை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்த பெண்ணுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கலையரசனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளடனர். கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவனுக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொலை முயற்சி நடந்திருப்பது அயன் கருவேப்பம்பாடி கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.