யாழில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!

265

யாழ்ப்பாணம் (Jaffna) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறித்த நபர் யாழ் பெருமாள் ஆலயத்தில் கணக்காளராக பணிபுரிந்து வரும் சூழலில் கடந்த மூன்று மாதகாலமாக தனிமையில் வசித்து வந்துள்ளார். 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கபட்டுள்ளார்.



இது தொடர்பில் யாழ்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.