மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த கிரிக்கெட் வீரருக்கு எதிராக விசாரணை..!

424

மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஏற்ப விசாரணை மேற்கொள்ளவதாக அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி இனங்காணப்பட்டால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கழிவறை என நினைத்து 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை இலங்கை அணி வீரர் ஒருவர் திறக்க முற்பட்டு குழப்பம் விளைவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.