இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணொருவர், கணவர் திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அம்ரீன் ஜஹான் (23). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அம்ரீனின் கணவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அம்ரீனுக்கு எதிர்பாராத விதமாக கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அம்ரீன் ஜஹான் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் தவறான உணவு பழக்கவழக்கங்கள்தான் என கணவரின் சகோதரி, மாமனார் என்னை குற்றம்சாட்டினர். மேலும், அவர்களுடன் சேர்ந்து என் கணவரும் ‘நீ ஏன் சாகக்கூடாது?’ என்று கேட்டார்.
என் மரணத்திற்கு காரணம் கணவரின் தந்தை மற்றும் சகோதரித்தான். என் கணவருக்கும் இதில் பாதி பங்கு உள்ளது என கூறியுள்ளார்.
அத்துடன் தனது தந்தையிடம் பேசிவிட்டு அம்ரீன் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து அம்ரீனின் தந்தை பொலிஸில் புகார் அளிக்க, கணவர் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.