காதலனுடன் ஓடிய மகள் : உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தாய், தந்தை, தங்கை எடுத்த விபரீத முடிவு!!

826

காதலனுடன் மகள் ஓடிச் சென்ற நிலையில், தாய், தந்தை மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து, தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் கிராமத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவதூறு ஏற்படும் என்ற பயத்தில் பெற்றோர் மற்றும் தங்கை ஆகிய மூவர் ஏரியில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி உயிரிழந்ததவர்கள் 55 வயது மகாதேவ் சுவாமி , 45 வயதில் அவரது மனைவி மஞ்சுளா, 20 வயதில் அவர்களின் இளைய மகள் ஹர்ஷிதா மூவரும் பைக்கில் சென்று புதனூர் ஏரிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பைக்கை நிறுத்தி, செருப்புகளை அதே இடத்தில் விட்டுவிட்டு, தற்கொலைக்கான கடிதம் எழுதி வைத்துள்ளனர். பின்னர், ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த காட்சியைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புப் படையினரும் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கான தற்கொலைக்குறிப்பில், “எங்கள் மரணத்திற்கு எங்களைத் தவிர வேறு யாரும் காரணமில்லை. எங்கள் சொத்துகள் எதுவும் எங்கள் மூத்த மகளுக்குக் கொடுக்கவேண்டாம்.

அவள் எங்களை ஏமாற்றிவிட்டாள். எங்களை போல யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது. அவதூறு காரணமாகவே இந்த முடிவை எடுத்தோம்” என எழுதியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், வீட்டை விட்டு ஓடிய மூத்த மகள், தனது பெற்றோர் மற்றும் தங்கையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.