லிப்டில் சிக்கிய மகன் : ஒரே நிமிடத்தில் மயங்கி சரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தந்தை!!

671

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மிஸ்ரோட் பகுதியில் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர்.

51 வயதாகும் இவர் தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் அந்த குடியிருப்பில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

ரிஷிராஜ் தனது இளைய மகன் தேவன்ஷுடன் புல்வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவதற்காக தேவன்ஷ் லிப்டில் ஏறியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மகன் கண்முன்னே லிப்டில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரிஷிராஜ்.

உடனடியாக ஜெனரேட்டர் அறைக்குச் செல்வதற்குள், திடீரென மயங்கி விழுந்து விட்டார். அதே நேரத்தில், மின்சாரம் வந்ததால் லிப்ட் கதவு திறந்து, தேவன்ஷ் பத்திரமாக வெளியே வந்து விட்டான்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்த போதும், ரிஷிராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். திடீர் மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என மருத்துவர்கள் கூறினர்.

மகனின் லிப்ட்டில் சிக்கியதால் அதிர்ச்சி காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகனின் பாதுகாப்பை நினைத்து தந்தை உயிரிழந்தது அந்தப்பகுதியில் வசித்தவர்களை கண்களில் கண்ணீர் வரவழைத்தது.