மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை : நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்!!

703

தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர், வாதுவ பகுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமண விழாவின் இறுதியில் நடனமாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.