மலசலகூட கதவென நினைத்து விமான நிலைய கதவை திறந்தவர் அமைச்சர் ரம்புக்வெலவின் மகன்!

398

லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இரண்டாவதாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.

இதனால் பயணிகள் பதற்றமடைந்ததுடன் சக வீரர்கள் அவரை கதவை திறக்க வேண்டாம் என சத்தமிட்டுள்ளதாக விமானத்தின் பெண் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும் ரமித் ரம்புக்வெல மலசலகூட கதவு என நினைத்து விமான நிலைய கதவை திறந்ததாகவும் அதன் பின்னர் அவருக்கு மலசலகூட கதவு இனங்காட்டப்பட்ட பின் அவர் பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் மன்னிப்பு கோரியதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய கிரிக்கெட் வீரர் மீது ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளது.