எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியிலான பஸ் வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பஸ் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் உறுதியான பதில் எதுவும் அளிக்காவிட்டால் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண உயர்வு குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குற்றம் சுமத்தினார்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.