தரமான படங்கள் தேவை – ஏ.ஆர்.ரஹ்மான்..

417

AR-rahman
சௌந்தர்ராஜன் தயாரிப்பில், “சில்லுன்னு ஒரு காதல்” கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’.

சத்யா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு பாடல் சி.டி.யை வெளியிட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “இயக்குநர் கிருஷ்ணாவை தாணு சார் தான் என்கிட்ட அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கதை சொல்லும்போது எமோஷனாக சொல்வார். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

பெரிய நடிகர்களின் படத்தைப் போல ‘நெடுஞ்சாலை’ படத்தை தரமாக எடுத்திருக்கிறார்கள் . படம் பண்ணினால் தரமா பண்ணனும்.

இப்போது ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டு இருக்கேன். இந்தியில் பத்து படம் தயாராக இருந்தாலும் புதுசா, குவாலிட்டியா படம் இருந்தால்தான் போறேன். இந்தப் படத்துல கடுமையான உழைப்பு தெரிகிறது” என்றார்