வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது..!

392

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த இரண்டு மாகாண சபைகளுக்கும் மற்றும் வடமாகாண சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளின் கால எல்லை அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின்போது குறித்த மாகாணசபைகளின் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் அதனை முன்கூட்டியே கலைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.