தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய கைகளுடன் வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் சூரின் மாகாணத்தை சேர்ந்த சமக்சாமாம் (59) என்ற பெண் சுமார் 50 வருடங்களாக மிகப்பெரிய கைகளை வைத்து கொண்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் கைகள் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய கை 9.50 கிலோ என்பதால், எந்தவிதமான வேலைகளையும் செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.
தனது நிலமையை கண்டு எவரும் கேலி செய்யக்கூடாது என்பதற்காக 20 வயது வரை தனது வீட்டிலேயே அடைந்து கிடந்துள்ளார்.
ஆனால் தற்போது தனது வயதான பெற்றோர்களை பார்த்து கொள்வதற்காக இவர் வெளியுலகிற்கு வந்து ஒரு மளிகைக் கடை வைத்துள்ளார்.
இந்த நோய்க்காக, சிறு வயதிலிருந்து பல சிகிச்சைகள் எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. இதற்கான ஒரே வழி இவரின் கையை துண்டிப்பது தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.