வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி வந்த தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

1205

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தையொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த வையாபுரி சந்திரன் (வயது 69) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.

அவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பப்டிருந்தார். மகனை தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.