வவுனியாவில் குழுமோதலில் ஈடுபட்ட ஆறு பேர் பொலிசாரால் கைது!!

878

Fight

வவுனியா, தெற்கிலுப்பைக்குளம் பிள்ளையார் கோவிலடிப் பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை குறித்த கோவிலில் பூசைகள் இடம்பெற்ற போது குழுமோதல் இடம்பெற்றது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த வவுனியா பொலிசார் செவ்வாய்கிழமை (16.09) இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆயர்படுத்தி புதன்கிழமை அவர்கள் இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை இன்று நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.