டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : உயர்வடைந்துள்ள ரூபாவின் பெறுமதி!!

15

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் (26) மேலும் உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(26) நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 318.32 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்றையதினம்(26) அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 328.69 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427.98 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி444.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369.18 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 383.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.55 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 238.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.27 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 237.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீப நாட்களாக, அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவுப் போக்கில் இருந்து வருகிறது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், விற்கும் விலை ரூ.354.03 ஆகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக வேகமாக மதிப்பிழந்து வந்த இலங்கை ரூபாய் சிறிதளவு வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.