தன் முகத்தினால் பார்போரை பயமூட்டும் வினோத பெண்மணி!!

663

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது முகத்தில் ஓவியங்களை வரைந்து அனைவரையும் அசரவைத்துள்ளார்.

பிரித்தானியாவின் நீயூ கேஸில் நகரை சேர்ந்த மெலிண்டா (21), என்ற பெண்மணி ஒப்பணையாளராக இருந்து தற்போது மிகப்பெரிய ஓவியராக உருவாகியுள்ளார்.

இவர் தனது முகத்தில் சிங்கம், முதல் பேய் வரை அனைத்து ஓவியங்களையும் வரைந்து ஆச்சரியம் அடைய செய்துள்ளார்.

இவர் தனது முகத்தில் ஒவியம் வரைய வெறும் 1 பவுண்ட் மதிப்புள்ள முக சாயம் மட்டுமே உபயோகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தனது ஒவ்வொரு ஓவியத்தையும் மூன்று மணி நேரத்திற்குள் வரைந்துள்ளார்.

இவரின் புகைப்படங்களுக்கு இணையதளத்தில் 6000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து மெலிண்டா கூறுகையில், நான் இந்த ஓவியத்தை விளையாட்டுதனமாக ஆரம்பித்தேன் என்றும் தற்போது இதனை மிகவும் ரசித்து செய்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ஒவியங்களை வரையும் போது பலர் கண்டு பயந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

40 41 42 43 44 45 46 47 48 49